Friday, February 17, 2012
Wednesday, February 15, 2012
.......அஜித்காந்த் vs கிருஷ்ணதாஸ் ..
அஜித்காந்த் vs கிருஷ்ணதாஸ்
( B.E BEFORE ELECTION )
( B.E BEFORE ELECTION )
தாஸ்:என்ன அஜித்காந்த் எப்படி இருக்கீங்க ?
காந்த்: ஏ....தமிழ்நாட்டுல மொத்தம்....
தாஸ்: அய்யய்ய...சினிமா வசனம் மாறியே பேசிக்கிட்டு ...
இப்ப நா என்ன கேட்ட .நல்லா இருக்கீங்களான்ன..?
காந்த்: ஏ ...விளக்கங்கேட்டா சொல்லணும் அதுதான்டா
தமிழனோட பண்பாடு....
தாஸ்: ஹலோ யாரு...? தன்ராஜா ஆமா.. ஆமா..
டெல்லிலதான் இருக்க ..
காந்த்: என்ன டெல்லியா....? மிஸ்டர் தாஸ்...!!
ஸ்டேட்டுக்கு உள்ளயே சீட்கெடைக்குமான்னுதெரியலஅதுக்குள்ளயே டெல்லி கனவா..? அன்பு
இனிமே மணி ஆட்ட வேண்டியதுதான் ...!!
தாஸ்: கருப்பு எம்.ஜி .ஆர் அவர்களே ...!படத்துல
பஞ்ச டயலாக் பேசனோமா fight பன்னமா
அதோட நிறுத்தீகொங்க ..அதவிட்டுட்டு
பாலிடிக்ஸ் எதுக்கு..?
காந்த்:ஏ ...இதப்பாரு.. நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு
சொல்றதுக்கு நீ யாருடா ..?அதுக்கு தேர்தல் கமிசன்
இருக்கு.. அவங்க சொல்லட்டும் நாங்க என்னைக்காவது
அரசியல்வாதீங்க நடிக்க வரக்கூடாதுன்னு ..சொல்லியிருக்கோமா..?
( சிரித்துக்கொண்டே ஹீ... ஹீ.. ஹீ..)
தாஸ்:தம்பி அஜித்காந்த் அரசியலே நாடகம்தான..
காந்த்: அதத்தான் நானும் சொல்ற உன்ன மாறி ஆளுங்க
பொறுப்பில்லாம ஜாதி வெறிபிடிச்சி
அலையறதாலதான் நாட்டுல தீவிரவாதம்
வளந்துகிட்டேவருது.. பாகிஸ்தான்ல இருந்து
பாடர் வழியா ஈஸியா தீவிரவாதிங்க நுழைஞ்சு
நாட்டையே சுடுகாடாக்கிட்டு இருக்காங்க..
( பொதுமக்களுக்கு ஒன்னு மட்டும் சொல்ற ஜாதி
ஜாதின்னு வெறிபிடிச்சி அலையாமஎல்லாரும்
இந்தியன்னு நெனச்சு ஓட்டுப்போடுங்க அப்பத்தா
நாட்டுல நல்லாட்சிநடக்கும் நீங்களு நல்லாயிருப்பீங்க....)
தாஸ்: மிஸ்டர் அஜித்காந்த் இப்ப ஏன் கேமெரா முன்னாடி
பேசறா மாறி பேசறீங்க ...
இங்க ஒன்னும் ஷூட்டிங் நடக்கல ...
காந்த்: ஏய் நிறுத்துடா......!! நீ இப்டியே பேசிட்டிருந்தா
இன்னும் கொஞ்ச நேரத்துல
இங்க ஷூட்டிங்கே நடக்கும் டா ...
தாஸ்: ஏம்பா வாசல்ல நிக்கற டாட்டா சுமோவ எடுத்து
ஷெட்டுல பார்க் பண்ணு..அடிச்சி உடைச்சாலும்
ஒடைச்சிடுவா...
மீண்டும் ஒர் நாள்....
காந்த்: 41 தொகுதி கொடுக்கற கட்சியோடதான் கூட்டணினு
பேசனிங்க தி.மு.க 31 தா குடுத்துருக்காங்கலாம் ..
தாஸ்:அரசியல்ல இதல்லாம் சகஜம்பா மீடியா கேக்கறப்ப
கொஞ்சம் Build up இருக்கத்தான் செய்யும் கட்சிக்குனு
ஒரு கவுரவம் இருக்குல்ல ...
காந்த்:இப்ப மட்டும் என்ன வாழுது... சரி சரி பாக்கெட்ல
வாழைப்பழத்தோல்இருக்கு எடுத்து கீழ போடுங்க ...
வழுக்கி விழுந்துடாதீங்க ..
தாஸ்: என்ன அஜித்காந்த் கொரலிவித்த எல்லாம் காட்றிங்க..?
காந்த்:அரசியல்ல இதுவும் சகஜம்தா ...!
தாஸ்: முடியல..... இந்த பொழப்புக்கு போய் பிச்ச எடுக்கலாம்..!
காந்த்:போய் எடு யார் வேணான்னது...??...!!
தாஸ்:தேர்தல் முடியட்டும் யார் பிச்ச எடுக்கப்
போறாங்கன்னு தெரியும்..??..!!
காந்த்: ம்ம் ..!! நீ தேர்தலுக்கு முன்னாடியே உன் தொகுதி மக்கள் கிட்ட
பிச்ச எடுக்க ஆரம்பிச்சிட்டியே ...உன்ன அரசியல்வாதி வேணும்னா
கூட்டணிக்கு வச்சிக்கலாம்...! ஆனா இந்த நாட்டு மக்கள் எப்பவும்
மன்னிக்க மாட்டாங்க..... இந்த எலக்சன்ல உனக்கு மட்டுமில்ல
உன் கூட்டணிக்கட்சி... ஆளுங்கட்சி... எல்லாத்துக்கும் பாடம்புகட்டுவ நீ வேணும்னா சாதி பேரை சொல்லி சீட்டு
வாங்கலாம்..ஓட்டு வாங்கலாம்.. ஆனா உன் சாதி
வெறி என் கால்ஷீல....கெடக்குற தூசி மாறி டா ....ம்ம்ம் வரட்டுமா ...
!!.........தமிழா தலை நிமிர்.....!!

இசைத்தமிழ்
வண்டமிழ்
ஒண்டமிழ்
தீந்தமிழ்
பைந்தமிழ் என்று
பன்முகங்கள் கொண்ட
பழந்தமிழை
தமிழ்த்தாயின் தலைமகனாய்
தரணியிலே அதன் புகழை
போற்றுவோம்.!
எங்கும் நிலை நாட்டுவோம்
வெற்றிக்கொடி ஏற்றுவோம்...!
தமிழா...!!
கவிச்சக்ரவர்த்தி கம்பனும்
வான்புகழ் வள்ளுவனும்
இளங்கோவும்
காப்பியத்தால்
குறளால்
இலக்கண இலக்கியத்தால்
இசைந்து வளர்த்த தமிழ்- இதை
அந்நியனிடமிருந்து
விடுதலை பெற
ஆனது ஆண்டுகள் இருநூறு...!!..?
அவன் மொழியின்
மோகத்திலிருந்து
விடுபடும் நாள் எப்போது...?
இனியும் தயக்கம் உனக்கேது..?
தமிழா....!
இனியும் தயக்கம் உனக்கேது..?
ஆருயிர் கொடுத்த
அன்னையை மம்மி என்கிறாய்
தந்தையை டாடி என்கிறாய்
உந்தன் பிரண்ட் என்கிறாய்
அமுதப்பாலூட்டிய
அன்னைத் தமிழை
நீ மறப்பது நியாயமா....?
இனியேனும்
இந்த நிலை மாறுமா...?
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அரசர் பலரும்
புலவர் பலரும்போற்றிப்
பாடி வளர்ந்த தமிழ்
பொதிகை மலை அகத்தியரும்
ஈசனுக்கு எடுத்துரைத்த
எங்கள் தமிழ்....
புலவர் தம் பாட்டுக்கு
பொருள் கொடுத்து
அவர்கள் வறுமை தீர்த்த
தமிழ்
அகிலம் யாவும்
அளந்த தமிழ்
அயல் நாட்டாரும்
வியந்து பார்த்த எங்கள்
வீரத்தமிழ்.....!!!
சமயம் பல போற்றி வளர்த்து
சரித்திரம் பல கண்ட
சங்கத்தமிழ்..
வெறி கொண்ட வெள்ளையனை
விடுதலைப் பாட்டால்
விரட்டியடித்த
வீரத்தமிழ்..
தமிழ் என்றாலே அமிழ்
அதிசயங்கள் நிறைந்த
அழகுத்தமிழ்
இதைப் போற்றிடு...!!
பேணிக்காத்திடு...!!
மொழி மீட்டிடு...!!
இனம்காத்திடு..!!
தமிழா...!!
தமிழன் என்றோர் நிறமுண்டு..!
தனியே அவனுக்கோர் குணமுண்டு..!
என
தனக்கென ஒரு அடையாளம்
அரிச்சுவடுசொல்லி
உலகத்தமிழனுக்கு
அரிதாரம் பூசியிருப்பது
என்றும் பலரை
அரியணையில் ஏற்றி
அமரச் செய்திருக்கிறது
இது
இந்நாட்டிற்காய் தோன்றிய
உதய ஒளி......!!
பாரதியும் பாரதிதாசனும்
பாடியதால்
கவிக்கோவும் கண்ணதாசனும்
இயற்றியதால்
ஏட்டிலிருந்து இமயமாக
எழுந்து நின்ற மொழி..!
ஓராயிரம்
வாலியும் வைரமுத்துவும்
கம்பனும் கண்ணதாசனும்
ஒரு கலைஞர் போதும்
உலகத்தமிழ் செம்மொழியாய்
உயர்த்தி நிற்கச் செய்தாரே
இது தவிர வேறென்ன வேண்டும்....?
தமிழனுக்கு
தமிழ் மொழியில் கல்வி
மருத்துவத்தில் தமிழ்
அணுத்தொழில்நுட்பத்தில் தமிழ்
ஆன்மீகத்தில் தமிழ்
என்று
எங்கும் வேண்டும்
தமிழ்...!
தமிழர் வாழ்வோடு
எங்கும் தொடர வேண்டும்
தமிழ்....
இராமாயணமும் மகாபாரதமும்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
காலம் வென்ற
கலையும் இலக்கியமும்
சோதிடமும் வானவியலும்
சொத்தாய் பெற்றிருக்கும்
தமிழ் மொழியை போற்றுவோம்
செம்மொழியாம் தமிழ் மொழியை
சேர்ந்திங்கு
ஒல்காப்புகழ் தொல்காப்பியரும்
அவரது மாணாக்கர்
அகத்தியரும்
அணி செய்து
பத்துப்பாட்டாய்
எட்டுத்தொகையாய்
பகட்டாத
பதினெண்கீழ்கணக்குநூலாய்
தமிழ்க்குழந்தைக்கு சூட்டும்
சிலம்பொன்று தந்த
சிலப்பதிகாரமும்
அதிலொன்று.....
பிள்ளைகளுக்கு
தமிழில் பெயர் சூட்டு....!
பெரும் தொழிற்கூடங்களுக்கு
தமிழில் பெயர் மாற்று....!
தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு
சலுகை காட்டு..!
இவையெல்லாம் நேருமெனில்
இமயத்தில் தமிழ் இனி ஏறும்
இனி வரும் வரலாறும்
பெயராக அல்ல
உன் தோள்களுக்கு
மாலை சூட்டும் மலராக......!!!!!.
!!!!........காதலின் மொழி ......!!!!
உன்னை நான் ரசிக்கிறேன் என் சுவாசம் நீயே..! நேசம் நீயே..!
எந்தன் நினைவே...! பகலின் கனவே..! நீ வாராயோ.....?
சாலைகளில் உன்னைக் காணாமல் அலையுது பனித்துளி....
மேகத்தின் மழையாய் உன்னில் யாசித்தேன்..
மௌனமும் கொல்லவே தினம் உன்னால் பாதித்தேன்
ஊரெல்லாம் சுற்றினேன் உன்னில் என்னை மாற்றினேன்
பெண்ணல்ல இவள் என்று ஓயாமல் சுற்றினேன்
பேசிய வார்த்தைகள் மிச்சம் போக மீதி இருப்பதென்ன...?
இனி பேசி புரியவைக்க என்னில் ஒன்னுமில்ல..
அவளை என்னவென்று சொல்ல..? நான் அழகை பார்ப்பதில்ல...?..!
மனசு ரெண்டும் மோதி மோதி காதல் பத்திக்கிச்சு...
மாலை மாற்ற நேரம் பார்க்கவேளைவந்திடிச்சி...
ஆ....ஆ... சிக்கி முக்கி உரசி பத்திக்கிச்சு..
சின்ன சின்ன ஆசைகள் தொத்திக்கிச்சு..
உள்ளே வெளியே மனசில் புயலே அடங்கி தீராது.........
உன்னோடு நானும் என்னோடு நீயும் உணர முடியாது...
விழி மூடிப் பார்க்க விண்மீன்கள் தோன்றும்
நிலவென்றே உன்னை நினைத்து தொட்டுவிடப்பார்க்கும்
எந்த கவிஞன் கூட எழுதி விடுவான்
உந்தன் பெயரை எந்தன் பாட்டில் படிப்பான்
எந்த மேகம் கூட எழுந்து போகும்
உன்னை கண்ணால் காணவே
மண்ணில் விழ வரம் கேட்கும்......
சில நாட்கள் நகரும் உந்தன் நினைவில் நான் நடந்தால்.....!!
நீல வானம் கூட நிறமும் மாறும் நீ ரசித்தால்.....!!.
தடயங்கள் போலே உனைத்தொடர்ந்திட வா......!!
தாயென்ற உறவுக்குத் தாரமாய் நீயும் வா வா.....!!!
நேசமிகு
வை.ர..
Subscribe to:
Posts (Atom)