Saturday, August 11, 2012

............ஒத்தையடிப்பாதையில......

பொட்டல் காட்டின்
ஒற்றையடி செம்மண் பாதை
புழுதி வாரிக்கொண்டு விரையும் 
பேருந்தில் கடக்கும்போது 
கவனிக்க .......
வளைந்த பாதை 
வண்டியின் தடங்கள் போல
நேராகி விடுகிறது
ஒரு சோதனைக்காய்
காலஞ்சென்ற
உழைத்து உலுர்ந்த
எம் முன்னோர்களின் 
பிரேதம் தோண்டப்பட்டபோது ..

இன்றும் அவர்களின் சிதைந்த 
முதுகுத்தண்டானது 
வளைந்து காணப்பட்டது...
அந்த ஒற்றையடிப்பாதை போல..

சிதைந்தது உடல்கள் 
உழைப்பு 
தொடரும் அதன்
தொன்மையான தடங்கள்...

Thursday, July 26, 2012

...........காத்திருப்பின் இலக்கணம்.....

காத்திருப்பின் 
இலக்கணத்தை 
காலம் உணர்த்திப்போனது....

காதல் சொல்லப்படும்வரை
''காத்திராதே ''
என்று........

.................ஒரு ஊர்ல...........


ஒரு ஊர்ல....
ஒரு ராஜா இருந்தாராம்...

ஒரு ராணி...

எப்போதாவது
ஒன்றுக்கும் மேல
மந்திரிகள்......

என்றே..
கதைகேட்டு பழக்கப்பட்ட
பால்யம்,.

பருவமாகி நிற்கும்
இவ்வேளையில்...

தெரிந்தும் தெரியாமலும்
ராணிகள் பலபேர்...

பல என்பதன் மடங்கான 
மந்திரிகள்...

ஆனாலும்...

கதையை இப்படித் 
தொடங்கலாம்
இன்றும்...

''ஒரு ஊர்ல ஒரு
ராஜா'' என்றே.....  

Thursday, July 5, 2012

..............சிட்டுக்குருவி.............



ஒரு சிட்டுக்குருவி 
எங்கள் வீட்டின் 
மோட்டார் வண்டியின்
காது வடிவ
பக்கக் கண்ணாடியின்
விளிம்பில்
தினமும் வந்தமர்கிறது..

யதேச்சையாய் தென்படும்
அக்குருவி
விளிம்பில் சிரத்தையுடன்
நின்று குனிந்து
கொத்திக்கொண்டிருக்கிறது..
ஆடியில் தெரியும்தான்
பிம்பம் பார்த்து....

அரிதாகிவிட்ட
அப்பட்சியை
நீங்களும் பார்த்திருக்கலாம். 

ரைஸ்மில்லின் பரந்த
வெளிகளில்
உலர்த்திய நெல்மணிகளை 
கூட்டமாக வந்து
கொத்திச்செல்லும் 
குறும்பறவை கூட்டத்தில் 
ஒன்று அது ..

அதனை ரகசியமாய் 
பார்ப்பவர்களுக்கு
அதனின் இச்செய்கை
தெரியலாம் தன்மீதான 
வெறுப்பாக 
இருக்குமென்று ...

அல்லது....

ஆடியில் படிந்திருக்கும் 
காலப்படிம
தூசுக்களை 
சுத்தம் செய்வது போலவும்
தோன்றலாம்...

ஆனால் ...

யாருக்குமே புரிவதில்லை 

தன்னிலிருந்து 
மற்றொன்றை
உயிர்ப்பிப்பதற்கான 
அதனின் 
இறுதி  முயற்சியாகவும்
விளங்கலாம் என்று..

ஒரு செல்போன் 
சிணுங்கும்போது 

ஒரு சிட்டுக்குருவியின் 
அசரீரி 
மெல்ல 
அமிழ்ந்து அடங்குகிறது....  
என்றென்றும் நேசமிகு..
வை.ர..

Monday, July 2, 2012

...............சென்னைத்திரை.......

''சார் ...ஷாட் ரெடி ''டைரக்டரின் குரல் கேட்டது .
ஓரமாய் லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஹீரோ ..சட்டென்று ஹாப் செய்துவிட்டு 
மீதமிருந்த 4 வரி குத்து பாடலிற்கும் ஆடி முடித்தாயிற்று ..

''சாரா ''...expression பத்தாது ...இன்னும் நல்லா...இங்கபாரு..டைரக்டர் மேலும் விளக்கினார் .
''என்னம்மா நீ மும்பை ஹீரோயின்லாம் நல்லா தமிழ் பாட்டுக்கு expression குடுக்குறாங்க ..

நீ தமிழ் பொண்ணு ...என்ன சொல்றது ...??
ஹிம் ..producer அப்பவே சொன்னாரு ..நான்தான் தமிழ் பொண்ணுதான் வேணுன்னு ஒத்த கால்ல நின்ன ..
எல்லாம் என்ன சொல்லணும் ..

முனுமுனுத்தார் டைரக்டர் ..

''ஏம்பா அடுத்த சீனுக்கு செட் பிராபர்ட்டி எல்லா எடுத்துட்டு வா ..
அசிஸ்டன்ட் ஆளுக்கொரு பக்கமாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்..

ஒருவழியாய் ஷூட்டிங் முடித்தாயிற்று ...

மாலை 6 மணி 
புது ஹம்மர் காரில் வந்து இறங்கினார் ...producer
மேனேஜர்  எதிரில்  வந்தார் ...வணக்கம் வைத்தார் ....இவர் கண்டும் காணாமல் டைரக்டர் அறைக்கு சென்றார் ..

அடுத்த நாள் சண்டை காட்சிக்கு வேண்டியதை அசிஸ்டன்ட் களிடம்  சொல்லிக்கொண்டிருந்தார் டைரக்டர் ...
உள்ளே வந்த producer அன்றைய ஷூட்டிங் பற்றி கேட்டார் ...

''ரொம்ப பிரமாதமா வந்துருக்கு சார் ''...
2012 ஹிட்ஸ்  வரிசையில வரும் .....நல்ல பேரு கெடக்கும் ..
''படம் 100days  ...சார்'' .. நம்புங்க நான் காரண்டி..என்றார் டைரக்டர் .

''ஹீரோயின் கால்ஷீட் கம்மியா இருக்கு.''
 சீக்ரம் போர்ஷன்ஸ்  முடிச்சுருங்க... கடைசியாக வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு  கிளம்பினார் ..producer

60 நாட்கள் கடந்தன.
அன்று வெள்ளிக்கிழமை.
சென்னைத்திரைக்கு ஏறக்குறைய 6 படங்கள் போட்டியில் இருந்தன ...2 பெரிய ஸ்டார்ஸ் படங்களோடு சேர்த்து..

சிட்டியில் பிரபல திரையரங்கில் டைரக்டரும் producer ம்..உட்கார்ந்திருந்தனர் ..
முதல் நாள் ஏராளமான கூட்டம் ...எதிர்பார்புகளுடன் அரங்கம் நிரம்பி வழிந்தது ....

ஆபரேட்டர் ரூமிலிருந்து சில நிறக் கதிர்கள் திரையின் மீது பட்டு பாத்திரத்தை
 தூக்கி எறியும் போது வரும் சவுண்டைப்போல dts காதைப் பிளந்தது .

வெளிச்சம்   கண்களைக்கூச கூடவே ஒலிக்க ஆரம்பித்தது வசனம் ..

''டேய் ..எழுந்திருடா.. எழுந்திரு ..மணி பத்தாவுது ...இன்னுமா    தூங்கற'' ..அம்மாவின் குரல் கேட்டது ..

யாரையோ ப்ரோடிசர போய் பாக்கணும்னு சொன்ன ..இன்னும் தூங்கினுகீற..
போ போய் குளிச்சிட்டு நாலு   வா துன்னுட்டு  சீக்ரம் கெளம்பு...

''நாம சொல்றத எது கேக்குது ..அது பாட்டுக்கு படம் எடுக்க போற...சினிமா சினிமான்னு தெனம் ஊர சுத்தினிகீது...
அம்மா புலம்பினாள்..  

...........நான் ........

தோழா இரு தீயா நீயும்
தானா எந்த பேரு வரும்..?
தடையில்லை அணையில்லை உலகத்திலே..!!

சரியா உனக்கென்ன என்ன..?
தவறா உனக்கென்ன என்ன..?
பழியில்லை பயமில்லை உனக்கெதிரே..!!

போராடு உனக்கென்ன துணிவோடு
சரியென்று பார்த்தாலே சாதிக்க முடியாது

விதியோடு தடையில்லை விளையாடு
உன் பேரை சொல்லாதா உருவாகும் வரலாறு..?

நானா..? வந்து சேரு நீயும்
நீ வா வருங்காலம் வரும்
நிழல்களை நிஜங்களை சிறைபிடிப்போம்

நாளை நல்ல வேலை வரும்
நேரம் நல்ல சேதி தரும்
முத்துக்களை சிப்பிகளும் சிறைபிடிக்கும்

மாறாமல் வாழ்க்கை இங்கேது..?
மாற்றம் ஒன்றேதான் எப்போதும் மாறாது..!!

காணாத கனவெல்லாம் இன்றோடு...
நனவாகும் நன்றாக நம்பிக்கை நடைபோடு...!!

Saturday, June 30, 2012

.....................சகுனி..........




 ஒரு frame ல கூட நிஜ பாலிடிக்ஸ் வாடையே இல்லாமல் politics பற்றி சொல்ல வந்திருக்கிறான் சகுனி..கவர்ன்மன்ட் கிட்ட இருந்து தன்னோட பூர்வீக வீட்ட மீட்கனும்னு சென்னைக்கு வர்ற ஹீரோ சகுனி  ஆட்டம் ஆடி கேம் ஓவர்ல எப்படி வீட்ட காப்பத்தறாரு என்பதே கதை....
 பின் மண்டைய சொரிஞ்சிகிட்டே வழக்கம்போல ஏய்...ஏய் ....ப ப பா ..னு கேரக்டர பாக்காம திரும்பி நின்று பேசும் பிரகாஷ்ராஜின் emotional  dialogues பல படங்களில் பார்த்து அலுத்ததுதான் .
முதலமைச்சரான பிரகாஷ்ராஜ் 6 கோடி தமிழன்ல இருந்து ஒருத்தர்கிட்டநேரடியா..பேச்சுவார்த்த நடத்துவதுகாமராஜர் காலத்துல கூட நடக்காது ..சகுனினு  பேர் வச்சதாலவோ என்னவோஅரசியல் அரங்கத்துலஹீரோ பேச்சாலயே எல்லாத்தையும் சாதிக்கிறார் ...(ஒரு வேலை இதுக்கு பேரு ராஜ தந்திரமோ.....?)

அப்புறம் ஒரு கொஸ்டின் பாஸ் ...(டைரக்டர் கிட்ட)எதிரிய மாட்டி விட போலீசுக்கு கஞ்சா கேச தவிர வேற ஏதும் கிடைக்காத எல்லா படத்திலையும் ...இனிமே புதுசா ஏதும் யோசிக்கலாம் ..!!
அரசியல்வாதிங்க கிட்ட போய் சாதாரண மக்களுக்கு என்ன செஞ்சிருகீங்கனு கேக்குறதும் அடிமட்ட தொண்டன தேர்தல்ல நிருத்தனுங்கிறதும் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் ...படத்தோட first  half கு மட்டும் பார்மாலிட்டிக்கு  வந்து போறாங்க heroine  ப்ரனிதா ....ஸ்லோ மோசன்ல ஹேர் காத்துல பறக்க heroine வருவத எத்தன படத்துலதான் பாக்றது ...??..!!அவ்...G .V பிரகாஷ்குமார் background ல ஸ்கோர் பண்றார் as usual ..கோட்டரு பத்தல பாட்டு மட்டும் முனுமுனுப்பு ரகம்..குடிய பத்தி பாட்டு டான்சுன்னு ...பீர் பொங்கவச்ச புல் பாட்டுக்கு கீழ drug லைன்...(அதாங்க ...ஸ்க்ரீன்ல போடுவாங்களே avoid alcohol னு ) 3 நிமிசத்துக்கு போட்டது புதுசு (எப்டியோ டாஸ்மாக்ல சேல்ஸ் கொறஞ்சா சரி ...)
இட்லிகட ராதிகா ஆச்சி நீங்கதான் ஆடியன்ஸ்கிட்ட ஈசியா ரீச் ஆவறீங்க ..அதுசரி கந்துவட்டிக்கு விடறவங்க கவுன்சிலரானா ஓகே ..மேயர் ஆனதெல்லாம் ...(சாரி சகுனியால் ஆக்கப்படுவது ) ரொம்பவே டூ மச் ....
ரஜினி கமல்னு சந்தானமும்  கார்த்தியும் மாறி மாறி பேர் சொல்லி கூப்ட்டு அடிக்கிற லூட்டிக்கு கொஞ்சம் சிரிப்பு ரெஸ்பான்ஸ்..இருந்தாலும் ...காமெடி பத்தல பாஸ் ...சாரி...
மொத்தத்துல பீடி சாமியார கோடி சாமியாராக்கி ...பெருமால CM ஆக்கி...ப்ரகாஷ்ராஜ...கடைசியா ஜெயிலுக்கனுப்பி ....கவர்ன்மன்ட் கிட்ட இருந்து தன்னோட வீட்ட save பண்ற இதுக்கெல்லாம் பேருதான் சகுனித்தனமா ....?
 மொத்தத்துல லாஜிக் இல்லாம மேஜிக் பண்ண ட்ரை பண்ணிருக்கு...சகுனி ......